இதுவரை :
வரதன் குணா இருவரும் மனப்புரிதளுக்காக மதுரையில் இருந்து FZ பைக்கில்
புறப்படுகின்றனர், petrol வள்ளிபுரத்தில்
தீர்ந்து விடுகிறது. இருவரும் கால் நடையாக நாக பூசணி அம்மன் கோவிலுக்கு செல்ல
முற்படும் போது, வரதனின் சித்ததின் படி நாகமாக ஊர்ந்து
சென்று நாகபூசணியின் அருள் பெறுவதை பார்க்கும் குணா மயங்கிவிடுகிறாள். மறுநாள் வரதனிடமிருந்து
call வருகிறது, விபரம் அறியும் முன்
இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்செயலாக வரதனின் “சு தா”வை (டைரி)
திருப்பி பார்க்க நேரிடுகிறது. அதில் குறிப்பிட்ட விஷயத்தை கண்டு உண்மை
விளங்கியவளாக தனது வண்டியை எடுத்துக் கொண்டு வள்ளிபுரம் விரைகிறாள் குணா.
இதற்கு மேல் தனது கற்பனை சக்தி கறைந்து போனதை தன்னுள்
எண்ணியவாறு இக்கதையை எழுதிய நந்தன், மேற்கொண்டு கதையை தொடரும் பொருட்டு வள்ளிபுரம் பயணித்து கொண்டிருந்தான்.
Sir
இந்த வரதன் அப்டி எங்கதான் போனான், உண்மையாவே
நாகமாக மாறிடான, driver சுப்பு கேட்ட
கேள்வி கதையை எழுதிய நந்தனின் சிந்தனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டார் போல்
இருந்தது.
நந்தன், நிஜங்களின் நிழலை பதிவு செய்வதில் காதல் கொண்டவன். அவன் கொண்ட காதல்
கடந்த 2 வருடங்களாக நாக பூசணியின் மீது படர்ந்ததற்கு காரணம், தன்னுடைய P.hd
படிப்பிற்கான Thesis work “இந்திய
கோவில்களும் அமானுஷ்ய சூழல்களும்” என்பதாகும்.
கடமையென ஆரம்பித்த நந்தனின் தேடல், ஆதியின் ஆழம் காண ஆசை
கொண்டது.
20,000
வருடங்களுக்கு முன்பு சிலோனில் இருந்து வள்ளிபுரத்திற்கு இடம்
பெயர்ந்த நாக மாணிக்க கற்கள், உக்கிர பாண்டியனின் சஞ்சலத்தை
போக்கியது.
வள்ளிபுரம் நாகபூசணி கோவிலில் உக்கிர பாண்டியன் வடித்த கல்வெட்டில், ஸ்ரீ-ஹர வருட முடிவில் நாக மாணிக்க கற்கள் மீண்டும் இடம் பெயர்ந்து
எலும்புருக்கி (TB) நோயினை முறிவு செய்து மக்களின் துயர்
துடைக்கும் என்பதே அம்மனின் சித்தம் என்றிருந்தது.
ஸ்ரீ-ஹர ஆண்டின் முடிவு என்பது 2012 தமிழ் வருட முடிவு, அதாவது ஸ்ரீ-நந்தன ஆண்டின் துவக்கம் (வருகிற April 13 முதல்). நாக மாணிக்க கற்கள் இடம் பெயர இன்னும் சில
தினங்கள் மட்டும் உள்ள நிலையில், அவற்றை காண தனக்கு சித்தம்
உண்டா இல்லையா என்கிற சிந்தனை எனும் சிலந்திவலை சிக்கலில் தனது மனம் ஆழ்ந்து
இருந்த போது தான்........
இதுக்குமேலயும் யோசிக்க முடியல சுப்பு, அதனால தான் நாம இப்போ
வள்ளிபுரம் போறோம் அங்க போனாலாவது ஏதாவது தோனுதானு பார்போம்,
நந்தனின் வார்த்தைகளில் தோல்வியை ஒப்புக்கொண்ட தோரணை தெரிந்தது.
பீப் பீப் பீப் பீப் பீப்................... (horn ஒலிக்கிறது)
யாருடா இவன் நொச்சு நொச்சுனு என்று tension ஆன சுப்பு, பின்னே வந்த பைக்கிர்கு side விட்டான். அந்த பைக்
முன்னேறி செல்ல செல்ல நந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது....... ஆம் அந்த பைக் TN
60J 6058, அதுவும் FZ அதனை ஓட்டி செல்வதோ ஒரு பெண்...............
இனி
தான்
உருவாக்கிய கதைமாந்தள் உயிர் பெற்று ஊடுருவதை பார்த்து பிரமிப்பில் இருந்த நந்தனுக்கு
இரண்டாவது ஆச்சர்யம் காத்து இருந்தது. Over
take செய்த அந்த பெண் slow செய்து, இரு வண்டிகளும் சமநிலை வந்ததும் நந்தனிடம் அப்பெண்,
“Excuse me….. வள்ளிபுரம் இன்னும் எவ்வளவு தூரம்” என்றாள். நந்தன்
சில கணங்களுக்கு பேச்சற்றவனாக இருந்தான். அவளின் கண்கள் கத்தியினும் கூர்மையாய்
இருந்தது. ஏனோ தனக்கான விடை இவளிடம் இருக்கும் என்பதில் அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது
நந்தனுக்கு.
“நாங்களும்
அங்க தான் போறோம், இதே வேகத்தில போனா இன்னும் கால் மணி நேரத்தில போயிடலாம்” என்றான் நந்தன்.
“Thanks..” என்று கூறியவள், கண்
சிமிட்டும் நேரத்தில் காணாமல் போனாள் பெயர் தெரியாத குணா. எதையும் விளக்கம் தந்து
புரியவைக்கும் நந்தனுக்கு, நடப்பவை யாவும் விளக்கம் இல்லாமல் அடுத்தடுத்து நடந்தேறுவதை “இதுதான்
தன் சித்தமோ....” என்றெண்ணிக் கொண்டான்.
நடப்பவைகளை
குறிப்பால் உணர்ந்த driver
சுப்பு, வினா ஏதும் வினவாமல், நிழல் குணாவான நிஜப்பெண்ணை பின் தொடர்ந்தான். மேலும் ஒரு ஆச்சர்யமாய், சிறிது தூரத்திலேயே அவள் வண்டியை ஒரு டீ கடையில் விட்டு விட்டு கையில்
ஒரு புத்தகத்துடன் வள்ளிபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“ஒவ்வொரு
சூழலும் ஒவ்வொரு சந்தர்ப்பம்” என்னும் கருத்தில் உறுதி கொண்ட
நந்தன் சுப்புவிடம், “வண்டியுடன் இந்த டீ கடைலேயே இரு, தயவு செஞ்சு இங்க
இருந்து போகுற வர தம் அடிக்காத please… “ அங்கிருந்து நந்தன்
சென்றதும் காலை அனைத்து வைத்திருந்த சிகரெட் துண்டை பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து.....
“Taste differs for different tongue….” என்று தனக்குள் புலம்பிக் கொண்டான்.
நிழல் குணாவை தனக்கான விடை தேடி விரட்டிச் சென்றான்
நந்தன். எவ்வளவு பெரிய தைரியசாளியும், பழக்கமில்லாத பெண்ணிடம் முதல் முறை பேசுவதற்கு வார்த்தை இல்லாமல்
தடுமாறுவான். அதே சூழல் இப்போது நந்தனுக்கும் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் தான்
கொண்ட தயக்கம் தன்னிடம் உள்ள வினாவை விடை காணவிடாமல் கொன்று விடும் என்று
எண்ணியதன் பலனாய் அவளை, “Excuse me….. Are u குணா?” என்றான்.
சம்பந்தம்
இல்லாத கேள்வி ஒன்று திடீரென்று தன்னை நோக்கி வந்ததை எதிர் பார்க்காத அந்த பெண், “இல்ல, என் பெயர் குணா கிடையாது. ஏன் கேக்குறீங்க” என்றாள்.
நிழல்
குணாவின் பெயர் நிஜத்தில் குணா இல்லை என்பதில் சிறிய ஏமாற்றம் நந்தனுக்கு. தன்னை
பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தான் ஏன் அவளை குணா என்றழைத்தான் என்கிற கதையை கோவிலை நோக்கி நடந்தவாறே
கூறிக்கொண்டு வந்தான். கோவில் வருவதற்க்கும் நந்தன் கதை கூறி முடிப்பதற்க்கும்
சரியாக இருந்தது.
கதையை
கேட்டு விட்டு, இரண்டு நிமிடம் கண் மூடிய மௌனத்தை - நீண்ட பெருமூச்சுடன் முடித்துக்
கொண்டாள் அப்பெண். So Mr.நந்தன், உங்களுக்கு
இப்போ உங்க கதைக்கு ஒரு முடிவு தேடி இங்க வந்து இருக்கீங்க. அதுக்கு நான் யாரு, எதுக்காக இங்க வந்து இருக்கேன்னு உங்ககிட்ட சொல்லனும் right.
அவளின்
பதில்களை வரவேற்கும் தோரணையில் தலையசைத்து yes, you are right என்றான்.
என் பெயர்
ஜெயந்தி, நா
இலங்கையில இருந்து வந்துருக்கேன். நந்தன் உங்களுக்கு வேண்டிய பதில் கடிப்பா
என்னால தர முடியும். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில விளக்கங்கள் நீங்க எனக்கு தரனும், இத நீங்க வினா எதிர் வினாதல்னு நினைக்க வேண்டாம், நம்மளோட
தேடல்ல ஒரு தெளிவு வேணும் அதுக்காக தான் கேட்குறேன்.
அவளின்
உருவ அமைப்பு அவளுக்கு 21 அல்லது 22 வயது இருப்பதை போல் இருந்தாளும்,அவளுடைய பேச்சில் காணும்
மெச்சூரிட்டி 40, 45 வயதை ஒத்து இருந்தது. அவளோட பேச்சு தந்த
வியப்பில் அவள் கூறியதற்கு ஆம் என்பதை தெரிவிக்க, மீண்டும்
ஒரு முறை தலையசைத்தான் நந்தன்.
சொல்லுங்க
நந்தன் “இவ்வளவு ஆர்வமா நாக பூசனியின்
வரலாறை தெரிஞ்சிப்பதின் காரணம் என்ன?”
கடமையா
ஆரம்பித்த வேலை இது.... என்னை நானே தவிர்க்க முடியாத
ஆர்வத்தின் விளைவே என்னை
இவ்வளவு தூரம் அழைத்து வந்ததே தவிர பெருசா வேற காரணம் ஒண்ணும் இல்ல.
தப்பா
நெனைச்சுக்காதிங்க நந்தன், வெறும் அற்ப பெயருக்கும், புகழுக்கும், அழியும் பொருளுக்காகவும், நம் முன்னோர்கள், சித்தர் பெருமக்கள் கண்டறிந்த பெரும் உண்மைகளையும்,
பொக்கிசங்களையும் பற்றிய செய்திகள வெளிக்கொண்டு வருவதுல எனக்கு உடன் பாடில்ல
அதனால் தான் அப்டி கேட்டேன்.
ஜெயந்தி
கூறிய பதில் நந்தனை இவ்விசயத்தில் மேலும் ஆழம் காண தூண்டியது. “நீங்க சொல்ற விஷயம்
எனக்கு மேலோட்டமா புரிஞ்சுக்க முடியுது, ஆனா அதனோட ஆழ் கருத்துக்கள என்னால புரிஞ்சுக்க முடியல கொஞ்சம் விளக்க
முடியுமா”.
30
வினாடி கண்களை மூடிய தியான நிலைக்கு சென்றவள், குருவே சரணம் என்று தனது மானசீக குருவை வணங்கி விட்டு விழிகளை திறந்தாள்.
உங்களோட thesisல உள்ளடங்கிருக்கிற அமானுஷ்யம் என்கிற விஷயம் இன்னைக்கு
சூழல்ல வெறும் sensation ஏற்படுத்துவதற்கான விஷயமா மட்டும் தான்
பயன் படுத்தப்படுது. அதுக்கு பின்னாடி இருக்குற உள் அர்த்தங்கள நாம அறிய ஆர்வம் காட்டுறது
கெடயாது.
நம்
முன்னோர்கள்ல இறை அம்சம் பெற்றவங்களையும், சித்தர்களையும், நாம super heroவை போல எண்ணுறோம். ஆனா உண்மை அதுயில்ல, அவங்களும்
நம்மள மாதிரி சாதாரண வாழ்வுதான் வாழ்ந்து வந்தாங்க. அவங்களோட
சிந்தனைகளயும், அறிவியல் சித்தாந்தங்களயும், அறிய கண்டு பிடிப்புகளயும் சமத்துவம் இல்லாத அரசாட்சி காலத்துல புறக்கணிக்கப்பட்டது.
Legalலா இந்த மாதிரி பிரச்சனைய சந்திச்சவங்க, illegalலா வேற மாதிரி பிரச்சனைகள சந்திச்சாங்க. தவறான
காரியங்களுக்கு தங்களுடைய கண்டுபிடிப்புகள் சென்று விட கூடாதுங்கரதுக்காக மறை
பொருளா அந்த கண்டு பிடிப்பையெல்லாம் குறிபேடுகல்ல சொல்லி இருப்பாங்க.
அந்த
மாதிரி மறை முகமா சொல்ல பட்ட விஷயத்துல ஒன்னு தான் இந்த நாக மாணிக்க கல்லும், அதை பற்றிய தவலும்.
எல்லாத்தையும்
எல்லாராலையும் தெரிஞ்சுக்க முடியாது, நீங்க அப்படி தெரிஞ்சிக்க நினைச்சதுல தப்பு ஏதும் இல்ல, ஆனா எதெல்லாம் நமக்கு தெரிஞ்சுக்கனுமோ அது மட்டும் தான் நமக்கு வெளிபடையா
தெரிய வரும், அதையும் மீறி ஒரு சில விஷயங்களை நமக்கு
தெரியுதுனா அது தான் நம்மோட சித்தம்.
நாகபூசணிக்கு
அப்போது தீபாராதனை காட்டப்பட்டது, அதில் தன்னை ஆட்கொண்ட குழப்பங்கள் மெல்ல மறைந்து கொண்டு இருப்பதை உணர்ந்தான்
நந்தன். இருப்பினும் இந்த குணா (எ) ஜெயந்தி இலங்கையில் இருந்து
இங்கு வர காரணம் என்ன, அவளின் சித்தம் தான் என்ன? என்ற கேள்விகள் அவனுள் எழாமல் இல்லை, அவளிடமே
அதையும் கேட்டேன்.
இலங்கைல
இருக்கிற சகலகலை சாலைல தான் நா படிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட பொழுதுபோக்கே சித்தர்
பாடல்களையும், அந்த கால கல்வெட்டுகளையும் எல்லாத்துக்கும் புரியிற மாதிரி எளிமையா இந்த www.siththarkal.com websiteல
பதிவு பண்ணுறதுதான்.
அந்த காலத்துல
இருந்த மருத்துவ முறையில குணப்படுத்தின பல நோய்கள இன்னைக்கு நம்மால தவிர்க்கவும் முடியல, தடுக்கவும் முடியல.
அப்படி பட்ட நோய்கள ஒன்னு தான் TB, இப்பவும் மும்பையில
100 கணக்கான பேர் மகிமா hospitalல treatment பலன் தராததுனால இறந்து போய்கிட்டு இருக்காங்க. இத முறியடிக்க நம் முன்னர்களோட
படைப்புகள் ஒன்னு தான் நம்ம கிட்ட இருக்கிற ஒரே ஆயுதம்.
மதுரைல இருக்கிற எங்க
சுந்தர மாமா மூலமா இங்க இருக்குற நாகபூசனி கோவில பத்தியும், நாக
மாணிக்க கள்ள பத்தியும் கேள்வி பட்டு இங்க வந்தேன்.
ஏதோ ஒன்று
ஓரமாய் நெளிந்து செல்வதை உணர்ந்த இருவரும் திரும்பி பார்த்தனர்...... அது ஒரு சற்பம்.......
மெல்ல
ஊர்ந்து சென்று கொண்டிருந்த அதனை எந்த தொந்தரவும் செய்யாமல், மனதினுள் நாக பூசணியை ஒரு
கனம் இருவரும் வணங்கி கொண்டனர். பின்னர் ஜெயந்தியே விளக்கங்களை தொடர ஆரம்பித்தாள்.
உங்க கதையில
நீங்க சொன்ன மாதிரி நந்தன வருடத்தின் ஆரம்பத்துல நாக மாணிக்க கற்கள் இடம் மாறுவது உறுதி, அத இடம் பெயர அம்மன் ஆணை
இட்டு இருப்பது நாக வம்ஸத்து வாரிசிடம் தான். இதெல்லாம் எங்க மாமா சொன்ன தகவல்கள் தான்.
திசை திருப்பி
விடப்படும் ஏவுகணை போல் நந்தனின் எண்ணம் எல்லாம் இப்போது ஜெயந்தியின் மாமாவை சந்திப்பதில்
இருந்தது, அதையும்
அவளிடமே தெரிவித்தான்.
நந்தன்
ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா ஒவ்வொரு வரலாறு உண்டு, அத தேடி கண்டு பிடிச்சா..... சொல்ல முடியாது, ஏன் நீங்க தேடுர அந்த வரதன் அதாவது நாகா வம்ஸத்து வாரிசு, அது நீங்களா கூட இருக்கலாம்.
Anyway, கண்டிப்பா எங்க மாமா கிட்ட உங்கள கூட்டிக்கிட்டு போறேன்.
ரொம்ப
நன்றி ஜெயந்தி... உங்கள சந்திச்சதுல நா ரொம்ப தெளிவா ஆனா மாதிரி feel பன்றேன். உங்களோட www.siththarkal.com கு இனிமே
ஒரு கொ.ப.செ. கெடைசாச்சுனு வச்சுக்கோங்க.
இருவரும்
நாக பூசணியை வணங்கி கொண்டிருந்தனர்.
நந்தனுக்கு மட்டும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத
நெருடல், உள்ளுணர்வு.
இன்று ஏப்ரல் 13, ஹர வருடத்தின் இறுதி நாள், மாணிக்க கற்கள் இடம் பெயர வேண்டிய நேரம், இறைவா இதில்
என் பங்கு தான் என்ன? ஜெயந்தியின் நட்பு கிடைக்க காரணம் தான்
என்ன... இது தான் என் சித்தமா..? சுந்தர மாமா என்பவர் நாகா வம்ஸத்து
வாரிசா.....? தெளிந்த நீரோடை போல் மாறிய நந்தனின் மனது மீண்டும்
கல்லெறிந்தார் போல் மாறியது.
இருவரும்
இரவை நெருங்கும் மாலையை ரசித்து கொண்டு தங்களின் வண்டிகளை நோக்கி நடந்தனர். டீ கடை
அருகே வந்து கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி......... driver சுப்பு சற்பமென ஊர்ந்து
கோவிலின் மலை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தான்......
“சித்தனை தவிர
யார் அறிவார், அவர்தம் கொண்ட சித்தத்தினை......”
பாகம் 4 ஐ படிக்க click செய்யவும்
to download this story in pdf.. click the link below..
http://www.box.com/s/517b771967ad13657e25